வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாய உத்தரவை எதிர்த்த தினகரன் மனு தள்ளுபடி

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் விஜய் நாராயணும், வரு​மான வரித்​துறை தரப்​பில் சிறப்பு வழக்​கறிஞர் எம்​.ஷீலா​வும் ஆஜராகி வாதிட்​டனர்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “வரு​மான வரித்​துறை மேல் முறை​யீட்டு தீர்ப்​பா​யம், தனக்​குள்ள சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி 763 நாட்​கள் கால தாமதத்தை ஏற்று பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் தலை​யிட முடி​யாது. மேல் முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​தின் உத்​தரவு தன்​னிச்​சை​யானது எனக்​கூற எந்த முகாந்​திர​மும் இல்​லை” எனக்​கூறி வி.எஸ்​.ஜெ.​தினகரன் தாக்​கல் செய்த மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளனர்.

Source link