ஐ.பி.ஓ.,வுக்கு வரும் எஸ்.எல்.சி.எம்.,
இந்தியா மற்றும் மியான்மரில் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண் தளவாட சேவைகளில் கவனம் செலுத்தும் ‘சோகன் லால் கமாடிட்டி மேனேஜ்மென்ட்’ நிறுவனம், புதிய பங்குகளை வெளியிட செபியிடம் ரகசிய முறையில் ஐ.பி.ஓ., ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. செபியின் ஆரம்பகட்ட கருத்துகளை பெறுவதற்காக ரகசிய முன்-தாக்கல் முறையை இந்நிறுவனம் தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
58.94 லட்சம் பங்குகளை விற்கும் ‘கோர்4 இன்ஜினியர்ஸ்’
பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் தடம் பதித்து வரும் மைசூரை சேர்ந்த ‘கோர்4 இன்ஜினியர்ஸ்’ நிறுவனம், நிதி திரட்டும் நோக்கில் பங்கு சந்தையில் களமிறங்குகிறது. இதற்கான டி.ஆர்.ஹெச்.பி., ஆவணங்களை பி.எஸ்.இ., – எஸ்.எம்.இ., தளத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்த ஐ.பி.ஓ., முழுதும் புதிய பங்குகள் வெளியீடாக அமைய உள்ளது. இதில் 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட கிட்டத்தட்ட 58.94 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
