– நமது நிருபர் –
2026 தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாக உள்ளார். இதற்காக, பலமான கூட்டணியை அமைத்து, ஓராண்டிற்கு முன்பே தேர்தல் பணிகளை துவக்க முடிவு செய்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் சென்னை வந்து, பழனிசாமியை சந்தித்து, அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்தார். பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு நம் ராணுவம் நடத்திய பதிலடி போன்றவற்றால், அமித் ஷா இதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்த முடியவில்லை.
கடந்த ஜனவரியில் பா.ம.க., அ.ம.மு.க. இணைந்தாலும், அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு தாமதமானது. ஒரு வழியாக தொகுதி பங்கீடு முடிந்தும், வேட்பாளர் தேர்வு தாமதம் ஆனது. அது நேற்று முடிந்தது. அமித் ஷா திட்டத்தின் முதல் கட்டம் நிறைவேற ஓராண்டாகி உள்ளது.
