இது ஒரு காலத்தில் கோபுரத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களை இணைத்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எத்தனை பேர் இந்தப் படிகளில் ஏறியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்!
1983-ஆம் ஆண்டு ஈபிள் டவரில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான நவீனமயமாக்கல் பணிகளின் போது, புதிய லிஃப்ட்கள் பொருத்தப்பட்டதால் அசல் படிக்கட்டுகளின் சில பகுதிகள் அகற்றப்பட்டன. ஆனால் அதுவும் உலக அதிசயங்களில் ஒன்று என்பதால் அவற்றை வீசி எறிவதற்குப் பதிலாக, 20 பகுதிகள் ஏலம் விடப்பட்டன. சில பகுதிகள் பாரிஸ் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டன, மற்றவை ஏலம் விடப்பட்டு, இப்போது இந்தப் படிக்கட்டின் சில பகுதிகள் ஏற்கனவே ‘சுதந்திர தேவி சிலை’ (Statue of Liberty) போன்ற பிரமிக்க வைக்கும் இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
இப்போது ஏலத்திற்கு வரும் 8.5 அடி உயரமுள்ள இந்தப் பகுதி, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏலத்தின் ‘Lot No. 1’ ஆகும். இது 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தனியார் சேகரிப்பில் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்று ஈபிள் டவரைப் பராமரிக்கும் அதே நிபுணர்களைக் கொண்டு சீரமைக்கப்பட்டுள்ளது.
