தமிழக சட்டமன்றத்துக்கான பொதுத்தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும், நாம் தமிழர் கட்சியினர் தனியாகவும், தமிழக வெற்றிக்கழகம் தனி அணியாகவும் களத்தில் நிற்கின்றன. இதனால் தமிழகத்தில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.
இந்த கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் வரிந்து கட்டிக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்வதிலும், தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
