இந்நிலையில், வரும் 9-ம் தேதி கேரள சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கடந்த சில வாரங்களாக மாநில எல்லையில் இரு மாநில அதிகாரிகள் சார்பில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, கேரளத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.9 மற்றும் அதற்கு முந்தைய நாளான 8 ஆகிய 2 நாட்கள் கேரளாவுக்குள் தோட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வரும் ஜீப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வழக்கமான பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வரும் 9-ம்
தேதி வாக்குப் பதிவுக்காக கேரளத்தில் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்று எஸ்டேட் உள்ளிட்ட பல இடங்களில் எந்த வேலையும் நடைபெறாது. மேலும் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
