இந்நிலையில், இந்தியக் கப்பல் உட்பட 4 கப்பல்கள் ஓமன் கடல் எல்லைக்குள் புதிய வழியில் சென்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. இந்த புதிய வழித்தடம் மூலம், சர்வதேசக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது.
தானியங்கி அடையாள கருவிகள் (ஏஐஎஸ்) மற்றும் தொலை உணர்வு தரவு கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றி வந்த 4 கப்பல்கள், சர்வதேச கடல் வழியை தவிர்த்து, புதிய வழித்தடத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன.
