இந்த நிலையில், அனைத்து தொகுதிகளிலும் கடந்த மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் முதல் நாளிலேயே வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உட்பட முதல் நாளில் மொத்தம் 867 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.1 (வங்கி விடுமுறை), ஏப்.3 (புனித வெள்ளி), ஏப்.5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் பொது விடுமுறை என்பதால் மனு தாக்கல் நடைபெறவில்லை. அந்த வகையில், இதுவரை 3 நாட்கள் மட்டுமே வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 3,430 மனுக்கள் இதில் 2,731 ஆண்கள், 698 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 3,430 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 84 மனுக்கள், பர்கூர் தொகுதியில் 29 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக மானாமதுரை, நிலக்கோட்டையில் தலா 5 மனுக்களும், காட்டுமன்னார்கோவில், திருவாரூர், பேராவூரணி, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில் தலா 6 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
