புதுடெல்லி: தமிழகம் உள்ளி ட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.650 கோடி மதிப்பிலான ரொக்கம், போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக ரூ.319 கோடி மதிப்பிலான சட்டவிரோத ரொக்கம், போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் ரூ.170 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
