மேலும், சமயநல்லூர் டாக்டர் பாலமுருகன் என்பவர் ஏற்கெனவே அதிமுக, திமுகவில் சீட் பெற முயற்சித்து முடியாமல் போனதால், சசிகலா கட்சியில் இணைந்து இத்தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில், நாகலட்சுமி என்ற பெண் களத்தில் உள்ளார்.
இந்நிலையில், திமுக வேட்பாளர் வெங்கடேசன் தொகுதியிலுள்ள வாவிடை மருதூரில் இருந்து கூட்டணி கட்சியினருடன் தனது பிரச்சாரத்தை நேற்று முன்தினம் தொடங்கி, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதேநேரம், கூட்டணி கட்சியினருடன் திருவேடகம் பகுதியிலிருந்து தனது பிரச்சாரத்தை நேற்று முன்தினம் தொடங்கிய அதிமுக வேட் பாளர் மாணிக்கம், குருவித் துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
வேட்பாளர்கள் கருப்பையா, பாலமுருகன், நாகலட்சுமி ஆகி யோர் தேர்தல் அலுவலகங்களை திறந்து தங்களது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
