TN Election 2026 | திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கருணாநிதியை எப்படியெல்லாம் பேசினார்கள்?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரியலூர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கவுள்பாளையத்தில் கூடியிருந்த மக்களிடையே உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஸ்டாலின் எப்போதும் மோடி, பாஜக பற்றி பேசுவார். இபிஎஸ் பாஜக அடிமை என்பார். அவரிடம் பேச வேறு சரக்கு இல்லை. உங்களுக்கு தில்லு இருந்தால் அதிமுக பற்றி பேசுங்கள், பதில் சொல்லத் தயார். அதை விடுத்து மக்களைக் குழப்பினால் 100% தோல்விதான்.

மோடி பற்றி அவர் அப்பா கருணாநிதியே, மோடி மிகவும் நல்லவர் என்று பேசியிருக்கிறார். (பேப்பர் ஆதாரம் காட்டுகிறார்), எப்போதும் அப்பா வழியில் நடக்கிறேன் என்கிறார். அப்படி என்றால் இவரும் பாராட்டணும்.

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் உதயநிதி பேசுகிறார். ஒரு காலத்தில் கூட்டணி அமைப்போம், சில நேரத்தில் கூட்டணி அமைப்பதில்லை, கூட்டணியில் இல்லாதபோது பேசிய பேச்சை எடுத்துக்கொண்டு இப்போது பேசுகிறார். பால்டாயில் குடித்தவரெல்லாம் பஞ்ச் டயலாக் பேசுகிறார்.

கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியை கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று சொன்னார். அந்த காங்கிரசோடுதான் கூட்டணி வைத்துள்ளீர்கள். 2014-ல் ஸ்டாலின், யாருடன் கூட்டணி என்பதை விட யாருடன் கூட்டணி இல்லை என்பதே முக்கியம், இனி ஒருபோதும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்றார். பிறகு எதுக்கு கூட்டணி வைத்தீர்கள்?

Source link