சென்னை: தவெக தலைவர் விஜய் நாளை செவ்வாய்க்கிழமை சென்னையில் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல்முறையாக தேர்தல் களம் புகும் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் போட்டியிடுவதற்கு கடந்த30ம் தேதி தாக்கல் செய்து பிரசாரத்தை துவக்கினார். பின் கொளத்தூர் சென்ற அவர், கூட்ட நெரிசலில் சிக்கியதால் வில்லிவாக்கத்தில் மேற்கொள்ளஇருந்த பிரசாரத்தை ரத்து செய்தார்.
வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், திநகர் ஆகிய நான்கு இன்று நடக்கவிருந்த விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுத்து இருந்தது. அதேநேரத்தில் வில்லிவாக்கம் தொகுதியில் பகல் 12 மணி முதல் மதியம் 1 மணிக்குள்ளும், திநகர் தொகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், நேரம் போதுமானதாக இருக்காது என்பதால், விஜயின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
நாளை செவ்வாய்க்கிழமை சைதாப்பேட்டையில் விஜய் பிரசாரம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கு ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்து இருந்தனர்.ஆனால், தவெக சார்பில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
