அன்புமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, மீனாட்சி அரோரா ஆகியோர் ஆஜராகி, மாம்பழம் சின்னத்தை முடக்கி பாமகவை அழிக்க முற்படுகிறார். மாம்பழம் சின்னம் பொதுசின்னம் இல்லை என்று சிவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று வாதிட்டனர். முன்னதாக தலைமை நீதிபதி,
எதிர்மனுதாரரான மகன் எப்படி வெற்றி பெறக்கூடாது என்று தந்தை நினைத்தால் அதை வாக்காளர்களிடம் சென்று தெரிவிக்க வேண்டும் என்றார். நீதிபதி ஜோய்மால்யா பக்சி, மனுதாரின் வாதம் அரசியல்ரீதியான அழிவை உருவாக்கும். வெற்றி பெற்றால் மாம்பழம் சின்னம் கிடைக்காமல் போகும் என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களுக்கு பிறகு, சென்னை சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிய மனுவை மனுதாரர் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் அவசரத்தை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்படும் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தனர்.
