டெல்லியில் உள்ள கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்வதற்கு டெல்லி அரசு கடுமையான தடை விதித்துள்ளதுடன், விதிமீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், எந்தவொரு பற்றாக்குறையை தடுக்கவும், விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் எல்பிஜி விநியோகம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும் முன்பதிவு செய்யப்பட்ட சிலிண்டர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவதால், எரிவாயு முகவர் நிலையங்கள் அல்லது சேமிப்புக் கிடங்குகளுக்குச் செல்லவோ அல்லது கூட்டமாகக் கூடவோ வேண்டாம் என குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முறையற்ற விற்பனை, பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை ஆகியவற்றை கட்டுப்படுத்துவதையும், நுகர்வோரை அதிகாரப்பூர்வ முன்பதிவு மற்றும் விநியோக முறையை நோக்கி திருப்புவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாக கொண்டுள்ளது.
