இதனால், பிரணிதா விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. தீர்ப்பு வெளியான உடனே, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே காத்திருந்த தந்தை ஞானேந்திர சர்மா மற்றும் உறவினர்கள், மேளதாளங்கள் முழங்க உற்சாகமாகக் கொண்டாடினர். அங்கிருந்தவர்களுக்கு லட்டுகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தக் கொண்டாட்டத்தின் போது பிரணிதாவின் குடும்பத்தினர் கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்தனர்.
அதில் பிரணிதாவின் புகைப்படத்துடன், “எனது மகளை நேசிக்கிறேன்; அவளே எனது இதயம், எனது ஆன்மா” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. பிரணிதா அணிந்திருந்த உடையில் “எனது குடும்பம் எனது உயிர்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பிரணிதா கூறுகையில், “இதுபோன்ற கடினமான காலங்களில் தோள் கொடுக்கும் எனக்கு கிடைத்த போன்ற குடும்பம் போன்று அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்” என்றார்.
