களமிறங்கிய 1,033 வேட்பாளர்கள்
தங்கள் கோரிக்கைகளை மாநில மற்றும் மத்திய அரசுகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல, விவசாயிகள் ஒரு நூதனமான முடிவை எடுத்தனர். ஒவ்வொரு விவசாயியும் ஒரு வேட்பாளராக அந்தச் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கினர்.
சாதாரணமாக ஒரு தொகுதியில் ஓரிரு சுயேச்சை வேட்பாளர்களே போட்டியிடும் நிலையில், மொடக்குறிச்சியில் மட்டும் அன்று 1,033 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 1,005 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் அடங்குவர்.

தேர்தல் ஆணையத்திற்கு எழுந்த சிக்கல்
1033 பேர் போட்டியிட்டதால் தேர்தல் ஆணையம் ஸ்தம்பித்துப் போனது. வழக்கமான வாக்குச்சீட்டிற்குப் பதிலாக 120 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தையே தேர்தல் ஆணையம் அச்சிட வேண்டியிருந்தது.
தேர்தல் ஆணையத்திடம் இருந்த வழக்கமான சின்னங்கள் அனைத்தும் தீர்ந்து போனதால், நூற்றுக்கணக்கான புதிய சின்னங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
