தவெக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக நிர்வாகி; திருநாவுக்கரசர் மகனுக்கு நெருக்கடி? – அதிரும் அறந்தாங்கி!

இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ மகன் சரண் பேசுகையில், “கடந்த 2011 தேர்தலில் திருநாவுக்கரசர், 2016-ல் அவரின் மகன் ராமச்சந்திரன் என இருவரும் அடுத்தடுத்து போட்டியிட்டு தோற்றனர். 3-வது முறை தி.மு.க கூட்டணியில் ராமச்சந்திரனுக்கு  வாய்ப்பு கொடுத்தபோது, தொகுதிக்குள் எதிர்ப்பு இருந்தது. தலைமை வலியுறுத்தியதால், தி.மு.க நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் களத்தில் இறங்கிப் போராடி ராமச்சந்திரனை வெற்றி பெற வைத்தோம்.

ஆனால், அவர் தொகுதிக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை. சாதாரண மக்கள் யாரும் இவரைச் சந்திக்க முடியாது. இவர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகள் உட்பட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தி.மு.க நிர்வாகிகள் யாருமே இருக்கமாட்டார்கள். காரணம், அவர்களை இவர் அழைப்பதுகூட இல்லை. தி.மு.க அமைச்சர்களுடன் இணக்கம் காட்டுவதில்லை. ஏன்? காங்கிரஸ் கட்சி நடத்தும்  நிகழ்ச்சிகள், போராட்டங்களிலும்கூட இவர் கலந்துகொள்வதில்லை.

முன்னாள் எம்.எல்.ஏ மகன் சரண்

முன்னாள் எம்.எல்.ஏ மகன் சரண்

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளரான நவாஸ் கனிக்கு ஆதரவாக பிரசாரத்தில்கூட பெரும்பாலும் இவர் கலந்துகொள்ளவில்லை. அப்படியிருக்க தி.மு.க-வினர் மட்டும் இவருக்காக எப்படி ஆதரவு பிரசாரம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இவர்களின் கான்ட்ராக்ட் கமிஷன் பிரச்னையால், பல்வேறு சாலைப்பணிகள் கிடப்பில் கிடக்கின்றன.

Source link