தென் தமிழகத்தில், முக்கியமாக விருதுநகர் மாவட்டம் (சிவகாசி, கோவில்பட்டி, சாத்தூர்) சங்கரன்கோவில், காவேரிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 320 பகுதி எந்திர தொழிற்சாலைகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் ஆலைகளும் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் சுமார் 90 சதவீதம் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தென் தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.
இந்த போரால் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் போன்ற முக்கிய மூலப்பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரானில் இருந்து தான் மெழுகு, அட்டை, பாலித்தீன் பைகள் ஆகியவை வந்து கெண்டிருந்த நிலையில் போர் காரணமாக அவை வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் மூலப்பொருட்களை இருப்பு வைத்துள்ள நிறுவனங்கள் போரை காரணம் காட்டி விலையை கடுமையாக உயர்த்தி உள்ளன.
