தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 7,600 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடந்த நிலையில், இதில் 4,994 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதன்படி சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை (ஏப்ரல் 9) வெளியாக இருக்கிறது. பல தொகுதிகளில் சில வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பிறகு ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
