இந்நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தே தீர வேண்டும்.
தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பாஜக அரசு இதுவரை ரகசியம் காப்பது ஏன்?
2001-ம் ஆண்டுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடியும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமரின் பதில் என்ன?
