2019-ஆம் ஆண்டின் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்கள், பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் மறுவாழ்வு பெற்றவர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்” எனத் தெரிவித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது இடம் பெயர்ந்து, பிலிபித், லக்கிம்பூர் கேரி, ராம்பூர் மற்றும் பிஜ்னோர் ஆகிய மாவட்டங்களில் குடியேறிய 12,380 இந்து குடும்பங்கள் இந்த நடவடிக்கையின் மூலம் பயனடைய உள்ளனர்.
நிலம் பெறுபவர்களின் விவரங்களின்படி, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 2,350 குடும்பங்களும், பிலிபித் மாவட்டத்தில் 4,000 குடும்பங்களும் பலனடைகின்றனர். பிஜ்னோர் மாவட்டத்தில் 3,856 குடும்பங்களும், ராம்பூர் மாவட்டத்தில் 2,174 குடும்பங்களும் பயனடைய உள்ளனர்.
