நமது நிருபர்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் 5 பேர் கொண்ட குழு வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தனி நீதிபதியின் உத்தரவுப்படி தீபம் ஏற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான கலெக்டர், போலீஸ் கமிஷனர் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இந்த அவமதிப்பு வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் விசாரணைக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் ,ஜோதி ராமன் அமர்வு மார்ச்17ல் இடைக்கால தடை விதித்தது.
நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சி தீபத்தூண் அருகே மலர் தூவி வழிபட 5 பேரை அனுமதிக்க வேண்டும் என மற்றொரு உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம், மதுரை போலீஸ் கமிஷனர் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 08) மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மலை உச்சியில் 5 பேர் கொண்ட குழு வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. திருப்பரங்குன்றம் தொடர்பான அனைத்து வழக்கையும் ஜூன்4ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
