இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், ‘மத்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு தயாராக உள்ளது. மாநில வருவாய்த் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆய்வு மேற்கொள்ள முடியாது. வருவாய் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை’ எனக் கூறப்பட்டது.
மனுதாரர் தரப்பில், ‘உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு இதே பதிலைத் தான் வழங்கியது’ எனக் கூறப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு தரப்பில், ‘இதே கோரிக்கையுடன் மனுதாரர் உச்ச நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்துள்ளார்’ எனக் கூறப்பட்டது.
அதற்கு மனுதாரர் தரப்பில், ‘திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும் என அங்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல்துறை கையகப்படுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
