வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம்தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 4918 வேட்பு மனுக்கள் ஏற்ப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசிநாளாகும். இன்று மாலையே இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.
இந்தத் தேர்தல்களை நியாயமான முறையில் நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதுடன், நடத்தை விதிகளையும் மிகக் கடுமையாக அமல்படுத்தியுள்ளது.
‘யாருக்கு உங்கள் வாக்கு’ என்று அரசியல் கட்சிகள் பெயரை குறிப்பிட்டு கருத்து சொல்ல பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் சிலர் பயன்படுத்துவது குறித்து சைபர் கிரைம் பிரிவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக தேர்தல் நடைபெறும் காலங்களில் வாக்காளர்களின் மனநிலையைத் திசைதிருப்பும் வகையிலான கருத்துக்கணிப்புகளுக்குத் தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான தடையை விதித்துள்ளது.
