இந்தச் சூழலில், திமுக எம்.பி.சல்மா தனது எக்ஸ் தளத்தில், “பாகிஸ்தானின் தலையீட்டால் போர் நின்றிருக்கிறது. விஸ்வகுரு பாவம்.. சங்கிகள் எப்படி ஜீரணிக்கப்போகிறீர்கள்?” என்று பதிவிட்டிருந்தார்.
பாகிஸ்தானைப் புகழ்ந்தும், பிரதமர் மோடியை விமர்சித்தும் அவர் பதிவிட்ட இந்தக் கருத்து தேசிய அளவில் விவாதமானது.
சல்மாவின் இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், “சிறுபான்மை வாக்கு வங்கிக்காக சல்மா கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகிறார்.
