தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் தேதியும் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் இதில், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இன்று (9-ம் தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி (LDF) மூன்றாவது முறையாக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யப் போராடுகிறது. அவர்களுக்குப் போட்டியாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) களத்தில் உள்ளன. இந்த தேர்தலில் 92 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 890 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 2.71 கோடி பேர் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர்.
