விஜய் குறித்து பாஜக தேசிய தலைவர் பரபரப்பு கருத்து

கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் அடுத்து நடக்கவிருக்கும் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று வரப் போகிறது. மே 4-ம் தேதி வெளியாகும் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். இந்த இரண்டு மாநிலங்களிலும் நிச்சயமாக மாற்றம் வரும்.

நாங்கள் ஏன் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும்? ஏற்கனவே பாஜக, அதிமுக-வுடன் வெற்றிக் கூட்டணியை அமைத்துள்ளது. அரசியலில் ஈடுபடுபவர், முழு நேரமாக தன்னை அரசியலில் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது அதிகமுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Source link