சென்னை: விஜய் ராஜா ஹோம்ஸில் ₹80 கோடி முதலீடு செய்தது சுந்தரம் ஆல்டர்நேட்ஸ், சுந்தரம் பைனான்ஸ் குரூப்.
சென்னையில் ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அந்த வளர்ச்சியை கவனித்து நிதி நிறுவனங்களும் இந்த துறையில் முதலீடு செய்ய முன்வருகின்றன. வீடுகளுக்கான தொடர்ந்த தேவை, நேரத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மற்றும் நம்பகமான டெவலப்பர்கள் ஆகியவை, ரியல் எஸ்டேட்டை ஒரு வலுவான முதலீட்டு துறையாக மாற்றியுள்ளது.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில், சுந்தரம் ஆல்டர்நேட்ஸ், சென்னையை மையமாகக் கொண்ட விஜய் ராஜா ஹோம்ஸில் ரூ.80 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடு, தனியார் முறையில் வெளியிடப்பட்ட என்.சி.டி., (Non-Convertible Debentures) மூலம், சுந்தரம் ஆல்டர்நேட்ஸ் – ரியல் எஸ்டேட் பெர்பார்மிங் கிரெடிட் பண்ட் – சீரிஸ் 5 வழியாக செய்யப்பட்டுள்ளது.
விஜய் ராஜா ஹோம்ஸின் தெளிவான வளர்ச்சி திட்டம், கட்டுமான முன்னேற்றங்களில் உள்ள ஒழுங்கு மற்றும் வாடிக்கையாளர்களிடம் உருவாக்கிய நம்பிக்கை ஆகியவை இந்த முதலீட்டுக்கான முக்கிய காரணங்களாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட நிதி, தற்போது செயல்பாட்டிலுள்ள திட்டங்களில் கட்டுமான பணிகளை வேகப்படுத்தவும், புதிய குடியிருப்பு திட்டங்களை தொடங்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.
2023 அக்டோபர் மாதம் முதல் விஜய் ராஜா ஹோம்ஸுடன் இணைந்து செயல்பட்டு வரும் சுந்தரம் ஆல்டர்நேட்ஸ், இந்த பண்ட் வழியாக, விஜய் ராஜா ஹோம்ஸ் குழுமத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த முதலீடு ரூ.100 கோடியை கடந்துள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில், விஜய் ராஜா ஹோம்ஸ் 986 வீடுகளை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்துள்ளது. இதன் மூலம், தரம் மற்றும் நம்பகத்தன்மை என்ற பெயரை நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது வி.ஆர்.எக்ஸ் (VRX) என்ற புதிய அடையாளத்துடன், ஸ்மார்ட் ஹோம் கம்யூனிட்டி டெவலப்பராக நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.
2026ம் ஆண்டில் மேலும் 967 வீடுகளை வழங்க திட்டமிட்டுள்ள வி.ஆர்.எக்ஸ், இதுவரை உருவாக்கிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த விரும்புகிறது. சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் நீண்டகால மதிப்பு கொண்ட முதலீடுகள் இந்த வளர்ச்சி பயணத்தின் மையமாக உள்ளன.

இந்த முதலீடு குறித்து விஜய் ராஜா ஹோம்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர், அஷ்வின் செந்தில்நாதன் கூறுகையில், “ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை நம்பி, சுந்தரம் ஆல்டர்நேட்ஸ் போன்ற நிதி நிறுவனம் எங்களிடம் முதலீடு செய்திருப்பது, எங்கள் செயல்பாடுகள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இந்த நிதி ஆதரவு, திட்டங்களை வேகமாக நிறைவேற்றவும், தரமான கட்டுமானத்துடன் மதிப்பு சேர்க்கும் சமூகங்களை உருவாக்கவும் உதவும்” என்றார்.
இந்த முதலீட்டின் மூலம், வி.ஆர்.எக்ஸ் கட்டுமான வேகத்தை உயர்த்தி, புதிய திட்டங்களை சந்தைக்கு கொண்டு வரும். தரம் மற்றும் நீண்டகால மதிப்பை மையமாகக் கொண்டு, சென்னையின் குடியிருப்பு சந்தையில் நிலையான வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
