பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இந்த முயற்சியை வரவேற்புக்குரியது. அதேநேரம் இந்தியாவின் மவுனம், இந்தியா இதுவரை கடைபிடித்து வரும் அணிசேரா கொள்கைக்கு நேர் எதிரானதாகும். ஆதிக்க மனப்பான்மையோடு பிற நாடுகளை அடிமைப்படுத்த முயற்சிக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு துணை போவதாகும். ஒன்றிய மோடி அரசின் இப்போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது.
உலக சமாதானத்துக்கும், அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இந்நேரத்தில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா வெறும் பார்வையாளராக இருப்பது, உலக சமாதானம், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் அணிசேராமையை அடிப்படையாகக் கொண்ட இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு மிகப் பெரிய பின்னடைவாகும்.
அமைதியை நிலைநாட்ட போர் நிறுத்த முயற்சிக்கு, சமத்துவமான, ஏகாதிபத்திய எதிர்ப்பு, வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு இருக்க வேண்டிய ஒன்றிய மோடி அரசின் மவுனம், ஒருச் சார்பு நடவடிக்கையாகும். இந்த ஏகாதிபத்திய சார்பு நிலை, இந்தியாவின் செல்வாக்கை, மரியாதையை உலக அரங்கில் வெகுவாக குறைத்திருக்கிறது.
