“வருவாய்த் துறை, காவல் துறை இணைந்து திமுகவை வெற்றி பெற வைக்க முயற்சி”

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய். தமிழக முதல்வர் சொல்லும் மாநில வளர்ச்சி எதில் என்றால் கஞ்சா விற்பனையில் மட்டுமே.

காங்கிரஸ் கட்சி எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. திமுக கூட்டணியில் மட்டும்தான் அக்கட்சி இருக்கிறது. ஆலங்குளம் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் காவல் நிலைய மரணங்களும் நடைபெற்று வருகின்றன. சட்டம் மற்றும் ஒழுங்கை கட்டுப்படுத்த காவல் துறையால் முடியவில்லை.

முதல்வரைப் பற்றி தவறாக பேசினால் உடனடியாக கைது செய்கிறார்கள். ஆனால், பிரதமரை கொலை செய்ய வேண்டும் என கூறியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Source link