புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினரான பிறகு முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்வார் என தெரிவித்துள்ள ஜேடியு மூத்த தலைவர் விஜய் சவுத்ரி, இன்னும் 2-3 நாட்கள் பொறுத்திருங்கள் என செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பிஹார் முதல்வரான நிதிஷ் குமார், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதற்காக பாட்னாவில் இருந்து இன்று (ஏப். 9) டெல்லி வந்தார். அவருடன் பிஹார் அமைச்சரும் ஜேடியு மூத்த தலைவருமான விஜய் சவுத்ரியும் உடன் வந்தார்.
அப்போது நிதிஷ் குமார் முன்னிலையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த விஜய் சவுத்ரி, “மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற பிறகு நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார். இன்னும் 2-3 நாட்கள் பொறுத்திருங்கள்.
