அதேபோல், நாம் தமிழர் கட்சி சார்பில் சிந்து போட்டியிட்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். புதிதாக களம் கண்டுள்ள தவெக சார்பில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இவர்கள் இளைஞர்களின் ஆதரவு மற்றும் விஜய்யின் செல்வாக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றனர்.
இந்தத் தொகுதியில் 4 பேர் களத்தில் இருந்தாலும் காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆனாலும், இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி பிரிக்கும் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, வன்னியர் மற்றும் தலித் மக்கள் வாக்குகள் இந்தத் தொகுதியில் அதிகம் உள்ளன. இவர்கள் வாக்கும், தொழிலாளர்கள் வாக்கும் யாருக்கு அதிகம் விழுகிறதோ அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
