மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

இதேபோல, நாதக, தவெக வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த முறை தவெகவும் களத்தில் உள்ளதால், முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம். மன்னார்குடி மக்களின் மனம் கவர்ந்த வேட்பாளர் யார் என்பது மே 4-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை அன்று தெரிந்துவிடும்.

எதிர்பார்ப்புகள்

* மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்.

* பாமணி உரத் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரித்து, தொழில் வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

* வேளாண் உற்பத்தி பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு தொழிற்சாலை தொடங்க வேண்டும்.

* மன்னார்குடி நகரம் முழுவதும் உள்ள 93 குளங்களை இணைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்.

* வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பதற்கு தேவையான தொழிற்பயிற்சிகளை வழங்க வேண்டும்.

* மன்னார்குடியை மையமாகக் கொண்ட மாவட்டத் தலைநகரம் அமைக்க வேண்டும்.

* வடுவூரை மையமாகக் கொண்டு தனி ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும்.

* மூவாநல்லூரில் அமைக்கப்பட்டதைப் போன்று தொகுதி முழுவதும் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளுக்கு மேற்கூரை அமைக்க வேண்டும்.

* நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் அமைக்க வேண்டும்.

* சென்னை- கும்பகோணம் நான்கு வழிச்சாலையை மன்னார்குடி வழியாக அதிராம்பட்டினம் வரை நீட்டிக்க வேண்டும்.

* மன்னார்குடி அரசு மருத்துவமனை யில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். இருதயநோய், மூளை நரம்பியல், சிறுநீரக பிரிவு மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

Source link