போர் நிறுத்தத்துக்கு நடுவே லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்

ஈரான்- அமெரிக்கா சண்டை நிறுத்​தத்​துக்​கும், லெப​னான் மீதான தாக்​குதலுக்​கும் சம்​பந்​தம் இல்​லை, அது தனிப்பட்ட சண்டை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். எந்த ஒப்​பந்​த​மாக இருந்​தா​லும், அதில் லெபனானும் சேர்க்​கப்பட வேண்​டும் என ஈரான் வலியுறுத்தி​யது. இதனால் போரை தொடர்​வ​தா, அமைதி பேச்​சு​வார்த்​தைக்கு செல்​வதா அல்​லது இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகுவை கட்​டுப்​படுத்​து​வதா என்ற குழப்​பத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்​ளார்.

பாக். சிறப்​புக்​குழு

ஈரான் போர் காரண​மாக நாட்​டின் பொருளா​தா​ரம் மற்​றும் பாது​காப்​பில் ஏற்​படும் நெருக்​கடியை சமாளிக்க தேசிய ஒருங்​கிணைப்பு மற்​றும் மேலாண்மை கவுன்​சில் (என்​சிஎம்​சி) என்ற சிறப்​புக் குழுவை பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்​துள்​ளார். இதற்கு பாக். பொருளாதா​ரத்​துறை அமைச்​சர் அகத் கான் சீமா, லெப்டினன்ட் ஜெனரல் ஜாபர் இக்​பால் ஆகியோர் தலைமை தாங்​கு​வர்.

பாகிஸ்​தான் அரசின் அனைத்து துறை பிர​தி​நி​தி​கள் இதில் உறுப்​பினர்​களாக இருப்​பர். சண்டை நிறுத்​தம் தோல்வியடைந்து மீண்​டும் ஈரான் போர் நடை​பெற்​றால் அதனால் நாட்​டின் பொருளா​தா​ரம் மற்​றும் பாது​காப்​பில் ஏற்​படும் பாதிப்​பு​கள், அகதி​கள் பிரச்​சினை குறித்து இந்த சிறப்பு குழு ஆரா​யும்.

Source link