ஈரான்- அமெரிக்கா சண்டை நிறுத்தத்துக்கும், லெபனான் மீதான தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை, அது தனிப்பட்ட சண்டை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். எந்த ஒப்பந்தமாக இருந்தாலும், அதில் லெபனானும் சேர்க்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியது. இதனால் போரை தொடர்வதா, அமைதி பேச்சுவார்த்தைக்கு செல்வதா அல்லது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கட்டுப்படுத்துவதா என்ற குழப்பத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளார்.
பாக். சிறப்புக்குழு
ஈரான் போர் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை கவுன்சில் (என்சிஎம்சி) என்ற சிறப்புக் குழுவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளார். இதற்கு பாக். பொருளாதாரத்துறை அமைச்சர் அகத் கான் சீமா, லெப்டினன்ட் ஜெனரல் ஜாபர் இக்பால் ஆகியோர் தலைமை தாங்குவர்.
பாகிஸ்தான் அரசின் அனைத்து துறை பிரதிநிதிகள் இதில் உறுப்பினர்களாக இருப்பர். சண்டை நிறுத்தம் தோல்வியடைந்து மீண்டும் ஈரான் போர் நடைபெற்றால் அதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்புகள், அகதிகள் பிரச்சினை குறித்து இந்த சிறப்பு குழு ஆராயும்.
