உடனே விண்ணப்பீங்க..! தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு!

தமிழ்நாடு மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் (TNOU) ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளும், வேலைவாய்ப்பிற்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய பல்வேறு டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளும் தொலைதூரக்கல்வியின் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன.

அனுமதிக்கப்பட்ட 105 ஆசிரியப் பணியாளர்கள் மற்றும் 68 ஆசிரியர் அல்லாத பணியாளர்களைக் கொண்டுள்ள இப்பல்கலைக்கழகம், நாட்டிலுள்ள 16 திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில், பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) 12பி தகுதி வழங்கப்பட்ட 6 திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தனித்து நிற்கிறது.

இந்நிலையில்,தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களின் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது கருணையுடன் பரிசீலித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் மற்றும் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பினை உறுதி செய்யும் நோக்கத்துடன், பல்கலைக் கழகத்தின் பல்வேறு தொலைதூரப் படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்புவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இதற்கான அதிரடி உத்தரவினை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் (TNOU) பிறப்பித்துள்ளது. இதன் மூலம் விருப்பமுள்ள மாணவர்கள் கூடுதல் கால அவகாசத்தைப் பெற்றுள்ளார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்குப் பிடித்தமான பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்க சேர வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

Source link