பீகார் முதல் மந்திரியான நிதிஷ்குமார் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்.
சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து, நிதிஷ்குமார் இன்று எம்.பி.யாக பதவியேற்றார்.
டெல்லியில் இருந்து திரும்பிய பின் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வார். அதன்பின், புதிய அமைச்சரவை அமைப்பது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனைகள் நடைபெறும். புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கும்.
