மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் மனு – தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர். ராமதாசுக்கும் , அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் கட்சி தொடர்பான உரிமை பிரச்சனை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் மருத்துவ ராமதாஸ் , பாமகவின் தேர்தல் சின்னமான மாம்பழத்தை முடக்குவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். 

பாமக கட்சி யாருக்கு சொந்தமானது? என்ற உரிமையியல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று, அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து ராமதாஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றமும் ராமதாசை சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், அன்புமணி தரப்பிற்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல் ராமதாஸ் தரப்பிற்கும் சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டு அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். இதன் காரணமாக மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

Source link