“திமுக மீண்டும் வெற்றி பெற்றால் உதயநிதி ஸ்டாலின் தான் முதல்வராவார்”

கோவை: “திமுக மீண்டும் வெற்றி பெற்றால் உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வராவார்” என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், “எங்களைப் பொறுத்தவரை தேசம் முதலில், கட்சி இரண்டாவது, நாங்கள் கடைசி. அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் சென்று பணியாற்ற வேண்டும் என்று கட்சி முடிவெடுத்துள்ளது. அவர் கட்சியின் மதிப்புமிக்க சொத்து, மூத்த தலைவர். அவருக்கு மாநிலம் தழுவிய அளவில் வரவேற்பு இருக்கிறது.

ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாங்கள் அவரை ஒரு தொகுதிக்குள் அடக்க விரும்பவில்லை. நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்காக கட்சி பாடுபடுகிறது. நாங்கள் அனைவரும் அதை அடையவே பாடுபடுகிறோம்.

Source link