கணிக்க முடியாத காரைக்குடி தொகுதியில் கலக்கப் போவது யார்?

மாங்குடி

காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் தங்களின் முகமாக இறக்கியுள்ளனர். இத்தொகுதியை பெற திமுக கடும் முயற்சி செய்தபோதும், இருவரும் தங்களுக்காகவே கேட்டுப் பெற்றனர்.

காரைக்குடியை காங்கிரஸ் தக்க வைப்பது அவர்களது கவுரவ பிரச்சினையாகவே பார்க்கின்றனர். இதனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் மாங்குடி கடந்த 5 ஆண்டுகளில், காரைக்குடியை சுற்றிலும் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி, மினி விளையாட்டரங்கு, டைடல் பூங்கா உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.

இது அவரது பலமாக கூறப்படுகிறது. சீட் கிடைக்காததால் திமுகவினர் அதிருப்தி, தேவகோட்டை பகுதியில் புதிய பேருந்து நிலையத்தை தவிர பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வராதது, காங்கிரஸ் எதிரணியினரின் உள்ளடி வேலைகள் போன்றவை மாங்குடிக்கு பலவீனமாக பார்க்கப்படுகிறது.

Source link