விஜய் பிரச்சார ‘சம்பவங்கள்’ தரும் தாக்கம் என்ன?

அதற்கு முன்பு வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் பிரச்சார நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. அவர் நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கு வந்து செல்வதற்கு போதுமான நேரம் இல்லாததால் அவரது இந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று விஜய் காரைக்குடியில் அக்கட்சி வேட்பாளர் மருத்துவர் பிரபுவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக இருந்தது. இதற்காக சென்னையில் இருந்து காலை 10 மணிக்கு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். காரைக்குடியில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு மதியம் 12.மணி முதல் 2.30 மணி வரை காவல் துறை அனுமதித்திருந்தது. ஆனால், மதுரையில் இருந்து காரைக்குடிக்கு 10 மணிக்கு புறப்பட்ட விஜய், காரைக்குடிக்கு மதியம் 2.35 மணிக்கே வந்தடைந்தார்.

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் காரைக்குடியில் பிரச்சாரம் செய்யும் இடத்துக்கு வராததால், விஜய் பிரச்சாரம் செய்யாமலே கை அசைத்தப்படி திருச்சிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

விஜய் பேச்சை கேட்கவும், அவரை பார்க்கவும் இன்று காலை முதல் 4 மணி நேரத்துக்கு மேலாக வெயிலில் காத்திருந்த தவெக தொண்டர்கள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

Source link