கவுகாத்தியில் மழை பெய்ததால் சற்று தாமதமாக டாஸ் போடப்பட்டது. டாஸில் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்ய, அதனைதொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி கடைசியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் போட்டியில் தோல்வியே சந்திக்காமல் ராஜஸ்தான் அணி 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
