இதில் அமெரிக்கா தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோரும், ஈரான் தரப்பில் அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வெளியுறவு துணை
அமைச்சர் மஜித் தக்த் ரவஞ்சி ஆகியோரும் பங்கேற்கின்றனர். சமரச தூதர்களாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர், வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் ஆகியோர் செயல்பட உள்ளனர்.
ட்ரம்ப் எச்சரிக்கை: ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழுக்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டியில், “ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுகள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெரியவரும். எங்களுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், ஈரானுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும். எங்களது போர்க் கப்பல்களில் அதிநவீன ஆயுதங்களை ஏற்றி வருகிறோம். ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் அந்த ஆயுதங்களை பயன்படுத்துவோம்’’ என்று தெரிவித்தார்.
