ஐந்து ஆண்டுகளில் இல்லாத வாராந்திர வளர்ச்சி உயர்வுடன் நிறைவு செய்த பங்கு சந்தைகள்

கடந்த ஆறு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை, இந்த வாரம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான வாராந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் மற் றும் நிப்டி கிட்டத்தட்ட 6 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

இது, கடந்த பிப்., 2021க்கு பின் பதிவான மிகச்சிறந்த வாராந்திர செயல்பாடாகும்.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 918 புள்ளிகள் உயர்ந்து, 77,550 புள்ளிகளிலும்; நிப்டி 275 புள்ளிகள் உயர்ந்து 24,050 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.

Image 1561784

முக்கிய காரணங்கள்

* வங்கி, நிதித்துறை சார்ந்த பங்குகளில் அதிக முதலீடு

* அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெற உள்ள பேச்சு, தற்காலிக போர் நிறுத்தம்

* கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது

* அமெரிக்காவின் ‘எஸ் அண்டு பி 500’ குறியீடு 6,800 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது

* டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தது.

இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறியதாவது:

தற்போது சந்தைக்கு சாதகமான சூழல் உருவாகியிருந்தாலும், நிப்டி 23,930 புள்ளிகளுக்கு மேல் நிலைபெற்றால் விரைவில் 24,400 புள்ளிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இருப்பினும், ஈரான் பேச்சுவார்த்தையின் முடிவுகளே அடுத்த வார சந்தையின் திசையை தீர்மானிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐ.டி., பங்குகள் கடும் சரிவு கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த ஐ.டி., பங்குகள், நேற்றைய வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்தன. வங்கி மற்றும் நிதித்துறை பங்குகள் சாதனை படைத்து வரும் நேரத்தில், ‘நிப்டி ஐ.டி.,’ குறியீடு மட்டும் 3 சதவீதம் வரை சரிந்தது முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐ.டி., பங்குகள் தொடர்ந்து நல்ல லாபத்தில் இருந்ததால், வாரத்தின் கடைசி நாளில் முதலீட்டாளர்கள் ‘லாப முன்பதிவு’ செய்திருப்பதாக தெரிகிறது. பங்கின் பெயர் தற்போதைய விலை (ரூ)* சரிவு விகிதம் (%) கோபோர்ஜ் 1,223.00 3.30 இன்போசிஸ் 1,291.40 3.00 டி.சி.எஸ்., 2,523.00 2.50 எம்பசிஸ் 2,329.00 2.40 டெக் மஹிந்திரா 1,438.90 1.50 (10.4.2026 நிலவரப்படி)

‘அப்பர் சர்க்யூட்’ அடித்த ‘ஸ்பைஸ்ஜெட்’
விமான போக்குவரத்து நிறுவனமான ‘ஸ்பைஸ்ஜெட்’, பிரிட்டன் நீதிமன்றம் விதித்த 70 கோடி ரூபாய் அபராதத்தையும் பொருட்படுத்தாமல், பங்குச்சந்தையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ‘அப்பர் சர்க்யூட்’ எனும் உச்ச வரம்பை தொட்டுள்ளது. விமான இன்ஜின் வாடகை நிலுவை தொகை தொடர்பாக, ‘சன்பேர்டு பிரான்ஸ்’ நிறுவனம் தொடர்ந்த வழக்கில், லண்டன் நீதிமன்றம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. இந்த செய்தியால் நேற்றைய வர்த்தக தொடக்கத்தில் பங்கு விலை சற்று சரிந்தாலும், பின்னர் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் 5 சதவீத ‘அப்பர் சர்க்யூட்’ உடன் 12.27 ரூபாயில் வர்த்தகத்தை முடித்தது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் இந்த பங்கு 15 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் எதிர்கால நிதி மேலாண்மை மற்றும் விரிவாக்க திட்டங்கள் குறித்த சாதகமான எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுவதால் இதன் பங்கு விலை அதிகரிப்பதாக தெரிகிறது.

Source link