RR vs RCB: "களத்தில் நான் பந்துவீச்சாளர்களை கவனிக்க மாட்டேன், மாறாக.!"- சூர்யவன்ஷி சொல்லும் சீக்ரெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.10) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இதில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.

202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வைபவ் சூர்யவன்ஷி முக்கியப் பங்காற்றியிருந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி

வெறும் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் குவித்த அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

விருது வென்ற பிறகு பேசிய சூர்யவன்ஷி, ” பயிற்சியில் என்ன செய்வேனோ, அதையே களத்தில் செய்வேன்.

புதிதாக எதையும் முயற்சிக்காமல், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே என் வழக்கம்.

யார் பந்துவீசுகிறார்கள் எனத் தெரிந்தாலும், பந்துவீச்சாளரைக் கவனிக்காமல், பந்தின் போக்கிலேயே கவனம் செலுத்தினேன்.

என் தந்தை, பயிற்சியாளர்கள், ரோஹி சார் எனக்கு பாதுகாவலர்களாக உள்ளனர்.

‘இந்த பயணம் நீளமானது, இது ஆரம்பம்தான். செயல்முறை மற்றும் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்து’ என அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்துவார்கள்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

நான் களத்தில் நீடித்திருந்தால் 10-20 ரன்கள் அதிகம் எடுக்க முடியும்.

இது இலக்கை துரத்தும்போது இரண்டு ஓவர்கள் முன்பே முடிக்கவோ, அல்லது இலக்கை நிர்ணயிக்கும் போது கூடுதல் ரன்கள் எடுக்கவோ உதவும்” என்று கூறியிருக்கிறார்.

Source link