இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறும் ஈரான் – அமெரிக்கா பேச்சு வார்த்தை அமைதிப் பாதைக்கு வழிவகுக்குமா?

அதிபர் டிரம்பிடமிருந்து தற்காலிகமாக 2 வாரங்கள் போர் நிறுத்த அறிவிப்பு வந்த நிலையில் நிரந்தர போர் தொடர்பாக ஈரானின் விடுத்திருந்த 10 கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று சொன்ன ட்ரம்ப் பின்னர் அவைகள் ஏற்புடையதாக இல்லை என அதிலிருந்து பின்வாங்கினார்.

அதில் லெபனான் ,காஸா மற்றும் ஏமன் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும் என்பதையும் ஈரான் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது

ஆனாலும், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை லெபனானின் பெய்ரூட் பகுதிகளில் நடத்திய தாக்குதலில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில் தான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான், இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் அமெரிக்கா-ஈரானின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் லெபனானில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை அமெரிக்காவுடன் அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என்றும் எந்த ஒரு சாத்தியமான சூழ்நிலைகளுக்கும் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

Source link