“இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்”

இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அரசும் மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசால் வழங்க முடியும் என்றால் இலவசங்களைக் கொடுக்கலாம். அதேநேரத்தில், இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளை அளிப்பது அது எந்த கட்சியாக இருந்தாலும், எந்த மாநிலமாக இருந்தாலும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த திட்டத்துடன் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கை இல்லாமல், மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த புரிதல் இல்லாமல் இன்னும் இன்னும் இலவசங்கள் அறிவிக்கப்படுமானால் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் அதனிடம் கேள்வி கேட்க வேண்டும்.

இலவசங்கள் அறிவிக்கிறீர்களே, அதற்கான நிதிக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வாறு பட்ஜெட்டை திட்டமிடப் போகிறீர்கள்? எவ்வாறு நிதி திரட்டப் போகிறீர்கள்? என்ற கேள்விகளை மக்கள் கேட்க வேண்டும். இந்த விஷயத்தை நான் மிகவும் வலியுறுத்த விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

Source link