நடப்பு ஐ.பி.எல். தொடரின் 17-வது லீக் போட்டி நியூ சண்டிகரில் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஐதரபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர்.
இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக அபிஷேக் சர்மா 18 பந்தில் அரை சதம் கடந்தார். இதில் 5 சிக்சர், 5 பவுண்டரி அடங்கும்.
