“மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி”

ஆசிரியர் நியமன ஊழல், நகராட்சிப் பணியாளர் ஊழல், மாடு கடத்தல் ஊழல், ரேஷன் பொருட்கள் விநியோக ஊழல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஊழல் என பல நூறு ஊழல்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரங்கேற்றி வருகிறது. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊழலில் ஈடுபட்ட எவரும் தப்ப முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்கு கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும்.

மேற்கு வங்கத்தின் ஏழை மக்களுக்காக பிரதமர் மோடி லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதி அனுப்பியுள்ளார். மேற்கு வங்க கிராமங்களின் வளர்ச்சிக்காக மோடி அனுப்பிய அந்த பணம் முழுவதும் மம்தா பானர்ஜியின் கூட்டுக்கொள்ளைக் கும்பல் வசம் சென்று வீணடிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் செய்த ஊழல்களுக்கு தண்டனையே கிடைக்காது என்று அவர்கள் தப்புக்கணக்கு போடுகிறார்கள். இந்த மேடையில் இருந்து நான் சொல்கிறேன், அந்த கூட்டுக்கொள்ளை கும்பலில் தொடர்புடையவர்கள் கொள்ளையடித்த ஒவ்வொரு பைசாவும் திரும்பப் பெறப்படும். கூட்டு சேர்ந்து கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவது உறுதி” என தெரிவித்தார்.

Source link