“திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்”

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆவினை முடக்கிவிட்டனர். இதனால் பாலுக்கு விலை கிடைக்கவில்லை.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனிமவள கொள்ளை தீவிரமாக நடைபெறுகிறது. ஆறுகளில் மணல் சூறையாடப்படுகிறது. கனிமவளம் ஏற்றிச் செல்லும் லாரிகளில் அடிபட்டு பலரும் உயிரிழக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் விளைநிலங்கள், நீர் வழிப் பாதைகள், ஏரிகள் உள்ளிட்டவை அபகரிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

Source link