அ .தி.மு.க., மற்றும் தி.மு.க., என இரு கட்சிகள் தான், மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மீது

அ .தி.மு.க., மற்றும் தி.மு.க., என இரு கட்சிகள் தான், மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மீது குற்றஞ்சாட்டுகிறது. இதுபோல, ஒருவருக்கு ஒருவர் குறைசொல்லி வருகின்றனர். மக்கள் நலன் மீது, எந்த அரசுக்கும் அக்கறை இல்லை. புதிதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால், அந்த கட்சி மக்களுக்கு என்ன செய்கிறது என பார்ப்போம். அதனால், என் ஓட்டு த.வெ.க.,விற்கு தான்.

மங்கையர்க்கரசி, 39 காஞ்சிபுரம்

அடையாளம் இழந்த காங்கிரஸ்!

நா ன், காங்.,கில் ஒரு நிர்வாகியாக
உள்ளேன். கடந்த 2021 சட்டசபை மற்றும் 2024 லோக்சபா தேர்தலில்,
தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டேன். இம்முறை நோட்டாவிற்கு ஓட்டு போடுவேன்.
தி.மு.க.,வோடு காங்., கூட்டணி அமைத்தது எனக்கு பிடிக்கவில்லை. தொடக்கம்
முதலே தனித்து நின்றிருந்தால், இன்று 30 சதவீத ஓட்டுகள் நிரந்தரமாக
கிடைத்திருக்கும். தற்காலிக ஆதாயத்தால், அடையாளம் இழந்துவிட்டது காங்கிரஸ்.


தினகரன், 45 செங்கல்பட்டு

Source link